Thursday, June 11, 2009

சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட இளைஞர்கள் பலர் வைத்தியசாலையில் அனுமதி


சந்தேகத்தின் போரில் கைது செய்யப்பட்டவர்களும், சரணடைந்தவர்களும் இலங்கையின் பலபாகங்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் வவுனியாமாவட்டத்தில் உள்ள பொதுக்கட்டடங்களில். தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். பம்பைமடு யாழ் பல்கலைக்கழக வளாகம்,பம்பைமடு தொழில்நுட்பக்கல்லூரி, பூந்தோட்டம் கூட்டுறவுப் பயிற்சிக்கல்லூரி,றம்பைக்குளம் மகளீர் கல்லுரி, வவுனியா மகாவித்தியாலய ஆரம்பப் பாடசாலை , வவுனியா காமினி மகாவித்தியாலயம் போன்ற இடங்களில் தடத்துவைக்கப்ட்டிருக்கின்றனர் இவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப் படுகின்றனர் என்பதை முன்னர் நாம் உங்களுக்கு அறியத்தந்திருந்தோம் (http://shathyam.blogspot.com/2009/05/blog-post.html) தற்போது இவ்வாறு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பலர் வவுனியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களில் முறிவுகளுக்கு உள்ளானவர்கள், கண்டல் காயங்களுக்கு உள்ளானவர்கள், வெளிக்காயங்களுக்கு உள்ளானவர்கள் என பலதரப்பட்டவர்களும் உள்ளனர்.

No comments:

Post a Comment