Saturday, May 23, 2009

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த இளம் வயதினர் தடுப்பு முகாம்களில் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றனர்


வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த இளம் வயதினர் தடுப்பு முகாம்களில் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த இளம் வயதினர் வவுனியாவிலும் மேலும் பல சிங்களப்பகுதிகளிலு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பெண்கள் வவுனியாவில் பூந்தோட்டம் கூட்டுறவுப்பயிற்சிக்கல்லுரியில் வைக்கப்பட்டுள்ளனர். ஆண்கள் வவுனியா றம்பைக்குளம் மகளிர் கல்லுரியிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். றம்பைக்குளம் மகளிர் கல்லுரியில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் கதறும் அளுகுரல் பகலிலும்;இரவில் அதிகமாகக்கேட்பதாக அயலவர்கள் கூறுகின்றனர் 20ம் திகதி இரவு இத்தடுப்பு முகாமில் இருந்து இரத்தக்காயங்களுடன்,இரத்தம் கசியக் கசிய ஒரு இளைஞன் மதில்எறிக்குதித்துத் தப்பித்து அருகில் உள்ள வணக்கத்தலம் ஒன்றிற்குச்சென்று அங்கு அடைக்கலம் கோரியிருக்கிறார் மதகுரு அவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார்.இவ் இளைஞன் மூலம் இச்சித்திரவதைச் சம்பவங்கள் வெளிவந்துள்ளன. இராணுவத்தைத்தவிர வேறு தொண்டு நிறுவனங்களோ கண்காணிப்பாளர்களோ இல்லாதநிலையில் வதைத்து அழிக்கப்படுகின்றனர். பிந்திய தகவலின்படி இவர்கள் தரம்பிரிக்கப்பட்டு கண்டிக்கு அனுப்பப்பட இருப்பதாகத்தெரிகிறது.

இறுதி யுத்தத்திற்கு முன் வந்தவர்களில் 1000 திஇற்கும் மேற்பட்டவர்கள் பம்பைமடு தொழில்நுட்பக்கல்லுரியில் வைக்கப்பட்டுள்னர் இவர்கள் தற்போதைக்கு பெரியஅளவிலான அச்சுறுத்தல் இன்றி இருக்கின்றனார் கடற்த 19ம் திகதி இவர்கள் இங்குள்ள மைதானத்தில் தம்மை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதம் இருந்தனர் பின் இராணுவத்தலையீட்டால் ஒரு மணிநேரத்தில் அது நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. தகவலுக்கு நன்றி. சர்வதேச பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதற்கு முன் இவர்களில் எத்தனை பேர் காணாமலடிக்கப்படுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது.

    ReplyDelete
  2. God save Tamil people! Everyone shd pray God everyday!to safeguard from inhuman barbarians!

    ReplyDelete