Saturday, May 30, 2009

காயங்களுடன் கிடந்தவர்களை பாதுகாபு வலயத்தில் வைத்துச்சுட்டுக் கொலைசெய்த இலங்கை இராணுவம்


வன்னியில் பாதுகாப்பு வலயம் என்று இராணுவத்தால் அறிவிக்கப்பட்ட பகுதியில் இறுதியாக யுத்தம் நடந்த காலர்பகுதி அதாவது 'மே' மாதம் 17ம் திகதிக்குப்பிற்பட்ட காலப்பகுதியில் ஆயிரக்கணக்கான காயமடைந்த போராளிகளும் பொது மக்களும் இராணுவத்தால் சுடப்பட்டும், உயிருடன் புதைக்கப்பட்டும் இருக்கின்றனர்.சில இராணுவத்தினர் மனிதாபிமானத்துடன் நடந்துகொண்டதாகவும் மாற்றும் ஒரு பகுதியினர் துவேசத்துடன் செயற்பட்டதாகவம் தற்போது வவுனியா வந்துள்ளவர்கள் கூறுகின்றனர்." தனது 15 வயது மகனை வயிற்றுக்காயத்துடன் வைத்திருந்ததாகவும் அங்கு இராணுவம்வந்து தாம் மகனைக் கொண்டு வருவதாகவும் தாம்மை போகுமாறும் கூறியகாகவும் இதுவரைக்கும் மகனுக்கு என்ன நடந்தது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை என்று கண்ணீருடன் தெரிவித்தார். மாற்றுமொருவர் கூறுகையில் இறந்த தமது தாயின் சடலத்தைப் புதைப்பதற்கு குளி ஒண்றுள் வைத்திருந்தோம் அதைக்கூட மூடவிடாது துரத்தியதாகாக் கூறினார். மற்றுமொருவர் கூறுகையில் காயமடைந்து கிடந்தவர்களை இராணுவம் சுட்டுக் கொண்றதையும்,அவர்களிடம் இருந்த தங்க நகைகளைக் களற்றியதையும் தாம் கண்டதாகவும் தெரிவித்தார். உண்மைகளைச் சொல்ல மக்கள் அச்சப்படுகின்றனர். வாய்திறந்து உயிர்துறக்கவேண்டி வந்துவிடும் என்பதால் என்னும்பல மனதைஉருக்கும் சம்பவங்கள் தாமதமாகவே வெளிவரும் மக்கள் தமது பாதுகாப்பை உறதிப்படுத்தியபின்.

Friday, May 29, 2009

யாழ்ப்பாணத் தடுப்பு முகாம்களில் தற்காலிகக் கூடாரங்களுக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இராணுவத்தினர்


யாழ்ப்பாணத் தடுப்பு முகாம்களில் தற்காலிகக் கூடாரங்களுக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இராணுவத்தினரின் செயற்பாடுகள் காரணமாக மக்கள் பெரும்அச்சத்துடன் வாழ்ந்து வரகின்றனர் திடீர் திடீர் என்று கூடாரங்களுக்குள் உட்பிரவேசிக்கும் போது பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். எந்தவிதமான கட்டப்பாடும் அற்ற வகையில் முழுச் சுதந்திரத்துடன் இவர்கள் இச்செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்கள் கடமையில் உள்ள கிராம அலுவலர்களையும் கணக்கில் எடுப்பதில்லை. கொடிகாமம் அல்லாரை தடுப்பு முகாமில் கிராம அலுவலர் இராணுவத்தால் தாக்கப்பட்டும் உள்ளனர்.தங்களின் எண்ணப்படியெ செயற்படவேண்டும் என்று இராவணுத்தினர் உத்தரவிட்டிருக்கின்றனர்.

Sunday, May 24, 2009

வவுனியா முகாங்களில் வேகமாகப் பரவிவரும் தொற்று நோய்கள்

வவுனியா முகாங்களில் வேகமாகத்தெற்று நோய்கள் பரவிவருகின்றன. இடநெருக்கடி காரணமாக இவற்ரின் பரவல் அதிகமாக உள்ளது. சின்னமுத்து, செங்கமாரி, வயிற்ரோட்டம் போன்ற நேய்கள் அதிகம் காணப்படகின்றன. தற்காலிகக் கூடாரங்களில் காணப்படம் அதிக வெப்பமம் இதற்குக் காரணமாகும். இங்கு சரியான முறையில் குளிப்பதற்கான நீர் வசதி இல்லை. சுத்தமான குடிநீர் வசதி இல்லை நோய்களுக்கு ஏற்ற உணவு உண்பதற்கும் வாய்பு இல்லாமல் மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.



















பூவரசங்குளம் வைத்தியசாலை அருகில் உள்ள பாடசாலைக் கட்டடத்தையும் இணைத்து இயங்கிவருகிறது அங்கு செங்கமாரிக் காச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் திறந்த வெளியில் காணப்படுகின்றனர்.


பூவரசங்குளம் வைத்தியசாலையில் சின்னமுத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ள தற்காலிகக் கொட்டகைகளில் ஒன்று














பூவரசங்குளம் வைத்தியசாலையில் சின்னமுத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அரை டம்ளர் பாலுக்காக வரிசையில் நிக்கின்றனர்










Saturday, May 23, 2009

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த இளம் வயதினர் தடுப்பு முகாம்களில் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றனர்


வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த இளம் வயதினர் தடுப்பு முகாம்களில் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த இளம் வயதினர் வவுனியாவிலும் மேலும் பல சிங்களப்பகுதிகளிலு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பெண்கள் வவுனியாவில் பூந்தோட்டம் கூட்டுறவுப்பயிற்சிக்கல்லுரியில் வைக்கப்பட்டுள்ளனர். ஆண்கள் வவுனியா றம்பைக்குளம் மகளிர் கல்லுரியிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். றம்பைக்குளம் மகளிர் கல்லுரியில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் கதறும் அளுகுரல் பகலிலும்;இரவில் அதிகமாகக்கேட்பதாக அயலவர்கள் கூறுகின்றனர் 20ம் திகதி இரவு இத்தடுப்பு முகாமில் இருந்து இரத்தக்காயங்களுடன்,இரத்தம் கசியக் கசிய ஒரு இளைஞன் மதில்எறிக்குதித்துத் தப்பித்து அருகில் உள்ள வணக்கத்தலம் ஒன்றிற்குச்சென்று அங்கு அடைக்கலம் கோரியிருக்கிறார் மதகுரு அவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார்.இவ் இளைஞன் மூலம் இச்சித்திரவதைச் சம்பவங்கள் வெளிவந்துள்ளன. இராணுவத்தைத்தவிர வேறு தொண்டு நிறுவனங்களோ கண்காணிப்பாளர்களோ இல்லாதநிலையில் வதைத்து அழிக்கப்படுகின்றனர். பிந்திய தகவலின்படி இவர்கள் தரம்பிரிக்கப்பட்டு கண்டிக்கு அனுப்பப்பட இருப்பதாகத்தெரிகிறது.

இறுதி யுத்தத்திற்கு முன் வந்தவர்களில் 1000 திஇற்கும் மேற்பட்டவர்கள் பம்பைமடு தொழில்நுட்பக்கல்லுரியில் வைக்கப்பட்டுள்னர் இவர்கள் தற்போதைக்கு பெரியஅளவிலான அச்சுறுத்தல் இன்றி இருக்கின்றனார் கடற்த 19ம் திகதி இவர்கள் இங்குள்ள மைதானத்தில் தம்மை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதம் இருந்தனர் பின் இராணுவத்தலையீட்டால் ஒரு மணிநேரத்தில் அது நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.