Saturday, May 30, 2009

காயங்களுடன் கிடந்தவர்களை பாதுகாபு வலயத்தில் வைத்துச்சுட்டுக் கொலைசெய்த இலங்கை இராணுவம்


வன்னியில் பாதுகாப்பு வலயம் என்று இராணுவத்தால் அறிவிக்கப்பட்ட பகுதியில் இறுதியாக யுத்தம் நடந்த காலர்பகுதி அதாவது 'மே' மாதம் 17ம் திகதிக்குப்பிற்பட்ட காலப்பகுதியில் ஆயிரக்கணக்கான காயமடைந்த போராளிகளும் பொது மக்களும் இராணுவத்தால் சுடப்பட்டும், உயிருடன் புதைக்கப்பட்டும் இருக்கின்றனர்.சில இராணுவத்தினர் மனிதாபிமானத்துடன் நடந்துகொண்டதாகவும் மாற்றும் ஒரு பகுதியினர் துவேசத்துடன் செயற்பட்டதாகவம் தற்போது வவுனியா வந்துள்ளவர்கள் கூறுகின்றனர்." தனது 15 வயது மகனை வயிற்றுக்காயத்துடன் வைத்திருந்ததாகவும் அங்கு இராணுவம்வந்து தாம் மகனைக் கொண்டு வருவதாகவும் தாம்மை போகுமாறும் கூறியகாகவும் இதுவரைக்கும் மகனுக்கு என்ன நடந்தது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை என்று கண்ணீருடன் தெரிவித்தார். மாற்றுமொருவர் கூறுகையில் இறந்த தமது தாயின் சடலத்தைப் புதைப்பதற்கு குளி ஒண்றுள் வைத்திருந்தோம் அதைக்கூட மூடவிடாது துரத்தியதாகாக் கூறினார். மற்றுமொருவர் கூறுகையில் காயமடைந்து கிடந்தவர்களை இராணுவம் சுட்டுக் கொண்றதையும்,அவர்களிடம் இருந்த தங்க நகைகளைக் களற்றியதையும் தாம் கண்டதாகவும் தெரிவித்தார். உண்மைகளைச் சொல்ல மக்கள் அச்சப்படுகின்றனர். வாய்திறந்து உயிர்துறக்கவேண்டி வந்துவிடும் என்பதால் என்னும்பல மனதைஉருக்கும் சம்பவங்கள் தாமதமாகவே வெளிவரும் மக்கள் தமது பாதுகாப்பை உறதிப்படுத்தியபின்.

1 comment: