Friday, May 29, 2009

யாழ்ப்பாணத் தடுப்பு முகாம்களில் தற்காலிகக் கூடாரங்களுக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இராணுவத்தினர்


யாழ்ப்பாணத் தடுப்பு முகாம்களில் தற்காலிகக் கூடாரங்களுக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இராணுவத்தினரின் செயற்பாடுகள் காரணமாக மக்கள் பெரும்அச்சத்துடன் வாழ்ந்து வரகின்றனர் திடீர் திடீர் என்று கூடாரங்களுக்குள் உட்பிரவேசிக்கும் போது பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். எந்தவிதமான கட்டப்பாடும் அற்ற வகையில் முழுச் சுதந்திரத்துடன் இவர்கள் இச்செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்கள் கடமையில் உள்ள கிராம அலுவலர்களையும் கணக்கில் எடுப்பதில்லை. கொடிகாமம் அல்லாரை தடுப்பு முகாமில் கிராம அலுவலர் இராணுவத்தால் தாக்கப்பட்டும் உள்ளனர்.தங்களின் எண்ணப்படியெ செயற்படவேண்டும் என்று இராவணுத்தினர் உத்தரவிட்டிருக்கின்றனர்.

1 comment:

  1. We pray GOD to do justice,peace,harmony and happiness to all Tamils in SL very soon!

    ReplyDelete